Saturday 18th of May 2024 03:30:34 AM GMT

LANGUAGE - TAMIL
ஐ.தே.க.வுடன் சுதந்திரக் கட்சி தொடர்ந்து பயணிக்காது - ஜனாதிபதி

ஐ.தே.க.வுடன் சுதந்திரக் கட்சி தொடர்ந்து பயணிக்காது - ஜனாதிபதி


ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பயணிக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தயராகவில்லை, ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரங்களை செய்ய மாட்டோம் என சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பில் ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இறுதி நிலைப்பாட்டின் பின்னர் சஜித்தின் வேண்டுகோளுக்கு பதில் கூறுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவும் கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்திருந்த நிலையில் தேசிய அரசாங்கம் குறித்த பல விடயங்களை கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பில் ஜனாதிபதியுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர மற்றும் லசந்த அலகியவன்ன ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

கடந்த வாரம் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் மூலமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகரவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட அழைப்புக் கடிதத்தின் பிரகாரம் இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE